Pages

Saturday, August 30, 2014

உணவுத்தேவரும்- பசிக்காலனும் - Ajiesh


வள்ளலார் சீவகாருண்ய விளக்கத்தில் சொல்வதை பாருங்கள்---;சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது - அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது - அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது - அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன - மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி கெடுகின்றது - சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் அழிகின்றது - பிராணன் சுழல்கின்றது - பூதங்களெல்லாம் புழுங்குகின்றன - வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன - கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது - காது கும்மென்று செவிடுபடுகின்றது - நா உலர்ந்து வறளுகின்றது - நாசி குழைந்து அழல்கின்றது - தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது - கை கால் சோர்ந்து துவளுகின்றன - வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது - பற்கள் தளருகின்றன - மலசலவழி வெதும்புகின்றது - மேனி கருகுகின்றது - ரோமம் வெறிக்கின்றது - நரம்புகள் குழைந்து நைகின்றன - நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன - எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன - இருதயம் வேகின்றது - மூளை சுருங்குகின்றது - சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது - ஈரல் கரைகின்றது - இரத்தமும் சலமும் சுவறுகின்றன - மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது - வயிறு பகீரென்றெரிகின்றது - தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன - உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.

இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.

அப்படியெனில் இங்கு சற்று சத் விசாரம் பண்ணுவோம்== உணவை அளிக்கும் ஒருவரை தெய்வத்துக்கு ஒப்பாய் வள்லலார் கூறுகிறார் எனில்,உயிரை ரெட்சிக்கும் உணவு எனும் அமிர்தத்தை எந்த தேவனுக்கு ஒப்பிடலாம்?,காலனை ஓட்டும் உணவு என்பதை என்னவென்று சொல்லவேண்டும்?, ஒரு பிடி உணவை கையில் எடுக்கும் போதே ,அல்லது உணவை காணும் போதே,உணவின் மணம் நுகரும்போதே அது கடவுள் அம்சம் என நினைக்க வேண்டாமா?உண்பதும் நுகர்வதும் கடவுள் அம்சத்தயே என நினைய வேண்டாமா? உணவை உண்ணும்போது அது கடவுளேதான் என நினைந்து வணங்கவேண்டாமா?அந்த உணவை உண்ணும்போது கிடைக்கும் திருப்தியின்பம் கடவுள் இன்பமென கருதவேண்டாமா?அந்த உணவை மெல்லும்போது உண்டாகும் ஆனந்தம் கடவுள் ஆனந்தம் என கொள்ளவேண்டாமா?அந்த கடவுள் அருள் நிறைந்த உணவே செரித்து சுத்த உஷ்ணமாகி கடவுள் அருளை வெளிப்படுத்துகின்றது என குதூகலிக்கவேண்டாமா?கடவுள் அருளாய் இந்த உலகத்தில் நிறைக்கப்பட்டுள்ள உணவு வகைகளை அவன் அருள் என அறிந்து வணக்குவோமாக,அவன் உயிர் என பாவிப்போமாக...அருளானது நம்மில் மென்மேலும் உணவாய் உட்செல்லட்டும், அந்தபடியே இவ்வுலகிலிள்ள ஏனைய உயிரினங்களையும் கடவுள் அருள் விளக்கமாகிய உணவை ஊட்டுவித்து சுத்த உஷ்ணத்தை அவர்களும் பெற்று கொள்ள செய்வோம், ஊண்பசியும் உயிர்பசியும் அகன்று ஆன்ம விளக்கம் மென்மேலும் உண்டாக உணவளிப்பீர்களாக விரைந்தே....

No comments: