Pages

Sunday, August 31, 2014

மகார வித்தை - Ajiesh

ஐயா மகாரத்துக்கு மேல வருகிர புள்ளியே விந்து..அதுக்கு
மேலே அர்த்தசந்திரன் வரும் அரைஅரைக்கா
மாத்திரை...அதுக்குமேலே நாதம் வரும்......நீங்க சொல்லி
இருக்கிறபடி அ+உ+நாதம் +விந்து+ம் என்றபடி இல்லை....
’ மகாரம் மலமாய் வரும் முப்பதத்துள்” என்பது மூலர்
வாக்கு...அதாவது புள்ளி இல்லாத மகாரமே
ஆணவமலத்தையுடைய ஆன்ம அணு.....அதற்க்கு
விந்துவேற்றம் செவித்தலே ,அதாவது ஒளியேற்ரம்
செய்வித்தலே ஞான முறை...அது சூக்கும
திருவுபதேசம்.....அதை “செவிச்செல்வம்” என்பர்...
துரியம் என்பது அகர உகர மகரம் கடந்து அரை
மாத்திரையானதில் இருக்கும் என சங்கர பகவத்பாதருடைய
குரு கவுட பாதர் விலக்குகிறார்....இங்க துரிய தவம் சொல்லி
குடுத்து சமாதி நிலை கிடைக்குதாம்,ஆனா அகாரத்தையும்
கண்டதில்லே உகாரத்தையும் கேட்டதில்லை,விந்து நாதம்
தெவையே இல்லை...என்னா உலகம் எப்படியாவது நாலு
பணம் பாக்கணும் ஆசிரமம் கட்டணும் பயிற்சி வகுப்புகள்
நடத்தணும்ன்கிற ஒரே குறிக்கோளிலே குருமார்கள்.....நல்ல
சீடர்களை வார்த்தெடுக்கணும் என்கிறகவலை கிடையவே
கிடையாது....கொடுக்கிற பீஸுக்கு சமாமான போதனை
அவ்வளவுதான்...ஞானம் கிடைச்சச்சு போ.....நல்லா உருப்படும்
குருவும் சீடனும்......
அரை மாத்திரை விளக்கம் என்பது குரு பாரம்பரியத்தால்
கிடைக்கப்பெறுவது...அப்படி ஒன்று இருக்கிறது என்பது பெரும்
ஞானிகளுக்கு தெரிந்தாலும் அதை
விளக்கத்தெரிவதில்லை....கேட்டால் அது ரகசியம் என
ஓடிவிடுவர்...ஆனால் உண்மை அதுவல்ல....உண்மையில்
அரை மாத்திரை என்பது உச்சரிக்கும்
தன்மையாகும்...ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று நீட்டுவது ஒரு
தன்மை...ஆனால் அது நீட்டுதல் இல்லை, ===ம்ம்ம்ம்ம்ம்ம்=
என முழங்குவது ஆகும், மற்றொன்று தான் ””””அரை மாத்திரை
பிரயோகம்”””,அது தீட்சா சம்பிரதாயம்.....அதுவானது
மகாரத்தின்மெல் புள்ளி போடாமல் அர்த்த சந்திரன் போட்டு
உச்சரிக்கும் முறை...அது குருவானவர் சீடனுக்கு காதில்
உபதேசித்து கருணை பொழியும் முறை...அதுவே அருள்
முறையான அமைப்பு.....அதையே வடமொழியில் ஓம்
என்பதை எழுதும் போது அதன் மேல் அர்த்தசந்திரனும் ஒரு
புள்ளியும் போட்டிருப்பார்கள் நம் ரிஷி முனிவர்கள் தங்கள்
கருத்தால் சுட்டிக்காட்டிய ஞான அமைப்பு அது.ஆனால்
காலப்போக்கில் உண்மை மறைந்து போனது,நாமும்
அரைமாத்திரை பிரயோகத்தை இழந்துவிட்டோம்,ஆனால்
கடவுள் கருணை உள்ளவர் என்பதை நாம்
மறந்துவிடக்கூடாது...கருணைசெலுத்தவேண்டியவர்களுக்கு
அவர் கருணைபொழிய தவறியதில்லை

No comments: