Pages

Sunday, August 31, 2014

மெய்பொருள் விளக்கம் - Ajiesh


எங்கு தான் பார்க்கிலும் அனந்தங்கோடி குருமுறைகள்,மெய்ப்பொருள் நிலைதேடில் அந்தோ பரிதாபம்,”விந்து நிலை தனையறிந்து விந்தை கண்டால் விதமான நாதமது குருவாய் போகும்....”இப்படி கூறி தொடர்கிறார் குரு முனிவர் அகத்தியர்,அது,அதென்னது விந்து நிலை,எது எதென்னது நாத நிலை?இது இன்னது எனச்சொல்ல யார் உளர்?
தானாகி யன்னர் உருவாய்-திசை
ஆயிரத்தெட்டும் செயறூத்திலாடித்
தானொளி தான்கண்டு கூவ- இறை
தானவ னாசையால் நோக்கியே பார்க்க
ஆன புகழிறை யாசை-அந்த
அன்னத்தின் மீதி லணுபோல் தரிக்க
தானே சுடராய் வழிந்து-கடற்
தன்னிற் றரித்தானைக் கண்டுகொண்டேனே
தன்னாசையால் வந்த நாதம்-அவன்
றானே கடலுயி ரோதிய வேதம்
அன்னத்தெவையும் படைத்து-வகை
யாவு முருவுக் குயிராய்ச் சமைத்துப்
பின்னா லேவந்து பிறக்கப்-பல
கோலமெடுக்கப் பிரபலஞ் செய்து
மின்னிய மங்குல முன்ன-இந்த
மேதினி நிறைந்தானைக் கண்டுகொண்டேனே
வானத்தின் மேகம் பொழிய-இந்த
வையகத் தானிய மெங்கும் நெளிய
ஊனினான் மாதா பிதாவும்-அவன்
உதிரமே நாதமாய் ஓசை முழங்கி
ஆணொடுபெண்ணு மிணங்கி-வந்த
ஆசையின் அவனொளி வாசந் துலங்கித்
தானத்தில் வந்து அளித்தே-உருத்
தானெடுத் தானையான் கண்டுகொண்டேனே
அந்த கருவிந்து நாதம்-அதில்
அன்னை யுதிரமுங் கூடின சூதம்
அந்த கருவைந்து பூதம்-அது
ஐந்தெழுத்தாகுமே ஓதிய வேதம்
விந்துக்குள்ளே தழல் நீதம்-அது
வீசும் புகையிலே யோடுஞ் சுவாசம்
அந்த குதிரைமேலேறும்-நந்தம்
ஆதியை நன்றாக கண்டுகொண்டேனே........

இதுவே ஞானிகள் கண்ட மெய் வேத பொருள் ஆகிய ஞான பொக்கிஷம்....காதுள்ளோர் கேட்கக்கடவர்....

No comments: