Pages

Saturday, August 30, 2014

ஒத்த பொருள் யாது? - Ajiesh

அன்பார்ந்த சன்மார்க்க சாதகர்களே, ஆன்மீக மார்க்கத்தில் பிரயாணம் பண்ணும் சாதகர்கள் முக்கியமாக அற்ந்து கொள்ளவேண்டியது “ஒத்த பொருள்’ என குறிப்பிட்டுள்ள மறை ரகசியத்தையே. அதென்னது ஒத்த பொருள் என கேள்வி எழும்புவது சஹஜமே,ஏனெனில் ஒவ்வொருவரும் ஒருவாறு விளக்கம் சொல்லுவார்கள், ஆனால் ஒத்தது அறிந்தவர் ஒருசிலரே.அதனாலேயே ‘ஒத்தது அறிந்தார் உயிர் வாழ்வர் மற்றெல்லாம் செத்தாருள் வைக்கப்பெடும்” என்றனர் ஞானிகள்.
உயிர் என்பது உலகில் இருக்கும் ஒரு பொருள், அதை அறிவது மாபெரும் பாக்கியமே ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த உயிர் உலகத்தில் வரவேண்டுமெனில் ”இரு” பொருள்கள் ஒன்று சேரவேண்டும். ஆகையினால் “உயிரானது உலகில் வாழ” இரு பொருள்கள் சேர்ந்தால் அல்லாது ”வாழாது”. அதனால் “வாழ்வு” என்பது “இரு பொருள்களின்” சேர்க்கை என்பதில் ஐயமில்லை அன்றோ?.
அந்த “இரு பொருள்கள்’ யாதெனில்” தாயும் தந்தையுமே” ஆகும். அதாவது தாயையும் தந்தையையும் அறிந்தவன் உயிர் வாழ்வான், ஏனையவர்கள் செத்தவர்களிடம் சேர்க்கப்படுவார் என்பதில் ஐயம் வேண்டாம், அப்படித்தானே?.ஆகையினால் “தாயையும் தந்தையையும் “ அறிவோமாக.
நம்முடைய உடலில் உயிர் இருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது, ஆனால் அது எங்கிருக்கிறது என தெரியாது, அப்படித்தானே?. ஆகையினால் உயிர் எங்கிருக்கிறது என்பதை அறிய எளிய மார்க்கமானது அது எங்கிருந்து வந்தது என்பதை அறிதலேயாம்.அல்லவா?.அதாவது நமது தாயும் தந்தையும் நமக்கு இரண்டு பொருள்களை தந்துள்ளனர்,ஒன்று விந்து , மற்றொன்று நாதம். இவை இரண்டுமே அவர்கள் நமக்காக தந்த மேலாம் பொருள்கள்,அல்லவா?.அப்படியாயின் உயிரானது இவ்விரண்டையும் சார்ந்து தானே இருக்கவேண்டும்?..
ஆம், அதுவே உண்மை, உயிரானது நமது தந்தையானவர் நமக்கு தந்த” விந்து” எனும் நிலையத்தில் இருக்கிறது., அது கோடி சூரியபிரகாசத்துடன் இருக்கிறது என்கின்றனர் ஞானிகள். இங்கு ஒரு விஷயம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், மேற்சொன்ன “விந்துவும் நாதவும்” ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது என்பதாகும்.அதாவது “விந்துவும் நாதவும்” கருப்பையில் சேர்ந்து ஏழு நாட்கள் அவை ஆனாகவோ பெண்னாகவோ அறிவு பிரியாமல் ”இரண்டுமற்ற” தன்மையில் இருக்கும், பிறகு ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ பிறவி எடுக்கும்.
ஆண் தன்மை மிகுந்தது ஆனாகவும் பென் தன்மை மிகுந்தது பெண்ணாகவும் இருக்கும். அப்போதும் ஆணிடத்தில் கொஞ்சம் பெண் தன்மையும் , பெண்ணிடத்தில் கொஞ்சம் ஆண் தன்மையும் இருக்கவே இருக்கும்.
இப்படியான “விந்துவும் நாதவுமே’ “ஒத்த பொருட்கள்”., இவை இல்லையெனில் உயிர் நிலை என்பது உலகத்தில் வராது. எந்த ஒரு உயிரும் உலகத்தில் வந்து முதிர்ச்சி அடைந்தாலும், அந்த உயிரின் அடிப்படை கூறான “ விந்துவும் நாதவும்” அவ்வுடம்பில் சிரசினில் இருக்கும்.அதில் உயிர் நிலையானது ஆணாகில் விந்துவுடனும், பெண்ணாகில் நாதமுடனும் இசைந்து இருக்கும்..
ஆனால் ,அவ்வுடம்பில் குடி இருக்கும் ஆன்மாவானது உயிரையோ ,விந்துவையோ நாதத்தையோ அறியாது “நான்’ எனும் அகந்தையினால் அறிவழிந்து கெட்டு மரணத்தை அடைகின்றது. ஆகையினால் அப்படி போகாது உயி நிலையை கண்டடைந்து கொள்ளவேண்டின் நாம் “ஒத்த பொருள்களை” கண்டடையவேண்டும். அந்த இரண்டு பொருட்களையும் “அகர உயிர் எனவும் உகர உயிர் எனவும் “ கொளளுவர் ஞானிகள். இவை இரண்டும் “தாய் தந்தை” அணுக்களேயாம், அல்லது “நாத விந்துக்கள்”, அடுத்து இவ்விரண்டின் சேர்க்கையினால் பிறக்கும் உயிரே “ம்” எனும் ஜீவ ஆன்மா.
ஆனால், ஜீவான்மாவானது அகர உகர பொருட்களை அரியாது ,தன்னுடைய உயிர் நிலையை அடையாது மரணத்தை அடைவது பரிதாபகரமானது.ஆகையினால் இவ்விரண்டு “ஒத்தபொருட்களை” அறிந்து உயிர் காப்போம், குழூஉக்குறியாக இவற்றை “பிச்சி மொட்டாகவும்” , எலுமிச்சை பழமாகவும் உருக்கொள்வார்கள். ஏனெனில், பிச்சி மொட்டானது விந்தணுவின் பரியாயமாகவும், எலுமிச்சை பழமானது சுரோனிதத்தின் பரியாயமாகவும் சொல்லுவர் ஞானிகள். இவற்ரையே “குரு தட்சிணையாக” கொள்ளுவது “குரு மரபு”.விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும் ,விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய், சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது, முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே,.....என அகத்தியர் சொன்னதுவே உயர்ஞானம்...வாழ்க குரு “திருவடி, வாழ்க சிவபாதம்”
  • Ram Prakash Tamilmuni அவர் சாயலிலேயே நம்மையும் படைத்தான் அம்மையப்பன்...
  • விஜயகுமார் சு அன்னையும் பிதாவுமாய் முன் தோன்றும் அகரதெய்வம்.பின் தோன்றும் அன்னைபிதா பிறந்திற(ரு)க்கும் பேதையராம
  • Salai Panchatcharam ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருளாம் பெரும் பயனை அத்தன் எனக் கருளியவார் யார்பெருவார் அச்சோவே....
  • Salai Panchatcharam ஒத்த பொருள் என்று தலைப்பிட்டு எல்லாம் 2, ரெண்டாக சொல்ரீங்க நாயர்..... இதன் விபரத்தை பிரம்மப் பிரகாச மெய்வழி ஆண்டவர்கள் வான்மதிக்கொரல் என்ற நூலில் பிண்ட உற்பத்தி என்ற தலைப்பில் தெளிவாக விளக்கியுள்ளார்கள். உண்மையில் தகப்பன் ஒரு பகுதியாகவும் தாய் ஒரு பகுதியாகவும் இருந்தாலும் நம் கருவில் இளம் கருவில் வளர்த்த 10 வயதான கன்னிதான் நம்மை காத்து வளர்த்து வந்தவள். பஞ்சபூதக் கலப்பாக நம் உடல் இருந்தாலும் நம்மை வழினடத்தும் அந்த சிவமயப் பொருள்தான் ஒத்த பொருள்.... அது ஒன்றுதான் அனைத்திற்கும் ஒத்ததாக நின்று விளங்குகின்றது.அது நம்மை இயக்கவில்லை என்றால் மற்ற அனைத்தும் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை. சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இவை ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு..... அது வாசனை, கேள்வி, இருகண், வாய் எவைக்கும் வல்லமை அளிக்கும் அக்கண்....
  • Hseija Ed Rian ”உண்மையில் தகப்பன் ஒரு பகுதியாகவு ம் தாய் ஒரு பகுதியாக இருந்தாலும்” என்று ஏற்றுகொள்ளுதலில் இரண்டு பேர் இருக்கிறார்கள். இளம் கருவில் மட்டுமே சொல்லப்பட்ட 10 வயதான கன்னியின் தேவை வருகிறது, இந்த உடலை வளர்ப்பதற்க்கு., அது சரியே, அவளே மகர வாலை. அவளெ ஒத்தவள். யாருக்கு என்றால் சிவத்துக்கு . வள்ளலார் சொல்லுவதை போன்று “கருணையும் சிவமே பொருளென கொள்ளும் காட்ச்சியும் பெறுக” . இங்கு கருணையாக மனிதறுக்குள் இருப்பதே அந்த வாலை. அவளே சிவமென கொள்ளுதல் வேண்டும். ஆதலால் சிவத்துக்கு “ஒத்ததே” ..அதாவது சிவ பொருளே. அந்த வாலையோ ஆண் பாதி பெண்பாதியாகவே உள்ளாள். “...முன்னாலே பாத்தால் பெண்போலே ரூபம் பின்னாலே பாத்தால் புருஷ ரூபம்... அய்யய்யோ அவளாடும் ஆட்டமதை கானப்போகா...” என்பர் சித்தர் பெருமக்கள்.
  • Salai Panchatcharam சக்தி சிவம் இரண்டாகித் தான்முடிவில் ஒன்றாகிச் சித்தாகி நின்ற திறனறியேன் பூரணமே என்று பட்டினத்துப் பிள்ளையும் சொல்லியுள்ளார்கள்.
  • Salai Panchatcharam உருத்தரிப்பதற்கு முன் உயிர்ப்புகுந்த நாதமும்
    கருத்தரிப்பதற்குமுன் காயமென்னும் சோனிதம்
    அருள் தரிப்பதற்குமுன் அறிவு மூலாதாரமாம்
    குருத்தறிந்து கொள்ளுவீர் குணங் கெடுக்கும் குருக்களே
    சிவ வாக்கியர்
  • விஜயகுமார் சு அர்த்த நாரீஸ்வர்ர் தோற்றத்திற்கும்,சிவன் மற்றும் சக்தி தனித்தனி சன்நிதிகளில் தோற்றமளிக்கும் ஞானரகசியம் புரிந்தவர்கள் இதன் உண்மையை ஒருவாறு உணர்வார்களோ?
  • Salai Panchatcharam தெளிவுதனில் தெளிவுதரும் அருளும் காணும் ..சஷனத்திலே சிவமயம் சேரத்தோணும் வழியதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும், ஒளிவுதனி லொளிவுதரு முறுதி சொல்வார் உர்ப்பனத்தி லுற்ப்பனமாய் உறுதி தோணும் வெளியதனில் வெளியாகி நாதத்துள்ளே விளங்கி நின்ற வாலைப்பெண் ஆதி காப்பே..கருவூரார்
  • Salai Panchatcharam ஆணும் பெண்ணும் தோணுமங்கே ஆண்பெண்ணற்ற நிலையும் ...அதைத்தும் தரிசனமாமெங்கள் இனத்தின் பஞ்சாட்சரமே
  • Hseija Ed Rian அபாரம்....செத்தவனுங்க மூக்கிலே பஞ்சி வைப்பானுங்க...உயிரோடு இருக்கிறவன் காதிலே பஞ்சி வைப்பான்....தூச்சமடா சூட்சாதி தூட்சம்.....அரஹரஹரோஹரஹர....
  • Salai Panchatcharam பிண்ட உற்பத்தி
  • Salai Panchatcharam சுத்த உடம்பாகும் அது உன் சூக்மமாகும், சொந்த உந்தன் மனையாகும் மனைவியாகும் ,பத்துவயதான கன்னி சபையுமாகும், பாசவுடல் பிறந்துவளர் தலமுமாகும்,முத்தரெல்லாம் அமுதருந்துங் கொங்கையாகும், மோட்சசாம்ராஜ்யமென்ற நாடும் ஆகும்,பித்தவுடல் நடுவாகும் கோடா கோடி, பெருங்கவலை தணிக்குமுந்தன் இல்லாமாமே...மெய்வழி ஆண்டவர்கள்
  • Hseija Ed Rian எங்க புரிய போகுது?...செவிடனுக்கு எங்கே சங நாதம் ஏறப்போகுது....
  • Hseija Ed Rian அப்போ சொல்லிவந்நா...ஜீவன் ஒரு ”நானோ பார்ட்டிக்கிள்”....அப்படி அது தாவர வேர் வழியாக மனிதன் உடம்புக்கு வருகிறது....அதுக்கு முன்னே ஆதிஆதியில் மனிதன் பிறந்ததுக்கு முன்னே,மரங்கள் செடி கொடிகள் மட்டும் வாழ்ந்திருந்த காலத்தில் அது மண்ணிலும் மரத்திலும் வேரிலுமாக ஓடிக்கொண்டிருந்திருக்கலாம்....மனித உடல் இருந்திரிப்பில் தானே அது மனிதரில் புக முடியும்?...அப்படியெனில் அந்த ஜீவன் மனிதராக எந்த உடல் வழியாக மரத்திலிருந்து உணவாக வயற்றினுள் சென்றது என கேட்க்க வேண்டி இருக்கிறது. அப்படித்தானே?
  • Hseija Ed Rian இப்படி செத்து நாப்பது நாள்ல உயிரானது மரத்துக்கு போயிட்டா...அது எக்கோடிகாலத்துக்கான நர அவத்தை அனுபவிப்பது எப்போது....அலகை தேகம் எடுப்பது எப்போது?...Salai Panchatcharam
  • Hseija Ed Rian கேக்கிற கேள்வியானது கேக்கப்படவேண்டியது என புத்திக்கு உறைப்பவர்கள் விளக்கத்தை வரவேற்பார்கள் என எனக்கு நம்பிக்கை...அல்லாது குதியோ குதியென குதிச்சாலும் விளக்கம் கிடைக்காது.....அப்படி இப்படி என பொழுதுபோக்கலாம்...உண்மையை விசாரித்து தான் அறியவேண்டும்...சத்விசாரத்தின் பயன் அதுவே....அப்படி விசாரம் பண்னும் போது அறியவேண்டியதை அறிந்து கொள்லலாம்...என வள்ளலாரே கூறியுள்ளார்
  • Hseija Ed Rian நான் மேலே கேட்ட கேள்வியானது மிகவும் முக்கியத்துவமானதும் அறியப்படவேண்டியதுமாகும் என எனக்கு தெரியும்
  • Hseija Ed Rian சும்மா அலகை தேகம் அலகை தேகம் என்று சொல்லுவார்கள்..அது வருவது எப்போது என்பதுகூட அறியவேண்டாமா?....அல்லாது நாப்பது நாளில் மண்ணுக்குள்ல போகிறதுக்கு “ஜீவன்” என்னது பஞ்ச பூத சரக்கா என்ன?
  • Salai Panchatcharam we are ready to accept your valuable questions regarding the subject. you are thinking that u r the only person knew all about aanmeegam.
    first mind your words.don't think we are ill literate. we are born and brought up in meivazhi. we are living with meivazhi. I understand that u have only book knowledge. you are unable to inter prate the periyorkal speeches and lyrics .
    So I don't want to disclose further about anything to you.
    I am expecting any reply regarding this.
    good bye

    With Regards
    G.Salai Panchatcharam
    +919444262414
  • Hseija Ed Rian நல்லது...100கிராம் மண்ணை அள்ளினால் அதில் 1 கிராம் மனித உயிரும், 2 கிராம் நாயின் உயிரும், 1 கிராம் குரங்கின் உயிரும், 1 கிராம் யானையின் உயிஉம் இப்பாடி அதாதுக்கு இந்த மண்னிலே இறந்து புதைக்கப்பட்ட அனைத்து விலங்குகளினும் உயிரும் கலந்து கோடானுகோடி வருடங்களாக இருக்கிறது என்பது பெரிய வழிதான்,,, அதாது உயிர்கள் மண்ணிலிருந்து மரத்துக்கு போயி மனிதனுக்கு சுக்கிலத்தில் வந்தால் மீண்டும் மனிதனாகவும், மரத்திலிருந்து ஏதாவது உயிர் மிருகத்தின் சுக்கிலத்தில் சென்றால் அது மிருகமாகவும் பிறக்கும் அப்படித்தானே...இதை ஏற்று கோள்லுகிறவர்களும் பெரியவர்கள் தான்.அல்லது மிருகங்களுக்கு உயிர் இல்லையோ என்னமோ...மனித உயிர் மட்டுமே மண்னுக்கு போயி மரத்துக்கு போயி பிறகும் சுக்கிலத்துக்கு வரும்...அப்படியா?...என்ன கதை அளக்கிறீங்க?....இதுவா பெரிய படிப்பு?
  • Hseija Ed Rian நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை...யாரையும் தரக்குறைவாக பேசவுமில்லை..ஆனால் புரிந்து கொள்ளவே இப்படி பேசுகிறேன்...இப்படி வருமா என நினைக்க வேண்டாமா?...வேறொரு கூட்டம் இருக்கிறது , செத்து எரிச்சவுடன் உயிரானது அக்கினியின் புகை வழியாக ஆகாயத்துக்கு போகுமாம்...அங்கிருந்து குளிர்ந்து மழை பெய்யுமில்லையா அப்போது மழை மூலமாக மண்னுக்கு வருமாம், அப்புறம் இதே கதை தான்..மரத்திலிருந்து பசுவுக்கு போயி பசுவின் பாலிலிருந்து மனிதனுக்கு வருமாம்...இப்படியும் ஒரு கதை....இதை நம்புறதுக்குண்ணு ஒரு கூட்டம்...அதுக்குண்ணு ஒரு மதம்...ஆளாளுக்கு கதை கட்டி நிறைய புத்தகம் ஆயிப்போச்சு...என்ன பண்றது?....எனக்கு தெரியலேப்பா....
  • Hseija Ed Rian கொஞ்சம் நினைச்சு பாக்ககூடாத இப்படியெல்லாம் இருக்குமா?....உயிரானது பஞ்ச பூதத்தால் உண்டு பண்ணினது ஆக இருக்காதே...பஞ்ச பூதமனது சடப்பொருள் ஆச்சே...அப்படி என்றால் சடப்பொருளில் இருந்து உயிர் பொருள் தோன்றாதே...உயிர் பொருளானது உயிர் பொருளில் இருந்து தானே தோன்றும் ..அப்படி என்றால் உயிர் எங்கிருந்து தோன்றியது ...அந்த மாபெரும் உயிர் பொருள் எது ?..இப்படியெல்லாம் நினைக்கவேண்டாமா/...
  • Hseija Ed Rian வறுத்த விதையை மண்னில் நட்டால் முளைக்குமா, தினமும் நீர் வார்த்தால் காய்க்குமா? முளைக்கவும் செய்யாது காய்க்கவும் செய்யாது....உயிரானது மண்னிலிருந்து வராது...நீரிலிருந்தும் வராது.அக்கினியில் இருந்தும் வராது ஆகாயத்தில் இருந்தும் வராது வாயுவில் இருந்தும் வராது.ஆனால் இவை ஐந்து உயிருக்கு உறுதுணையாக இருக்கிறது....இந்த பஞ்ச பூத அறிவும் அதன் தீட்சை முறைகளும் என தனியாக குருமுறையில் உண்டு.
  • Hseija Ed Rian உருத்தரிப்பதற்கு முன் உயிர்ப்புகுந்த நாதமும்
    கருத்தரிப்பதற்குமுன் காயமென்னும் சோனிதம்
    அருள் தரிப்பதற்குமுன் அறிவு மூலாதாரமாம்
    குருத்தறிந்து கொள்ளுவீர் குணங் கெடுக்கும் குருக்களே
    சிவ வாக்கியர்
    இது நீங்கள் நேற்று போட்ட பதிவு, இதில் உயிர் என்பது பஞ்ச பூத சரக்காகவா சொல்ல்ப்பட்டிருக்கு?
  • Saravanan Ramalingam Can anyone please explain me is the below lines from thiruvasagam is related to the subject we are discussing here,

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
  • Salai Panchatcharam Ezu kadal manalai alavidinum athikam enathidar piravi avatharam endrum solliyullaarkal
  • Hseija Ed Rian இந்த உலகத்தில் “உயிர்’ என்பது தாவரங்களை சார்ந்தே நிலை கொண்டுள்லது, இவ்வுலகினில் தாவரங்கள் இல்லையெனில் ஏனைய உயிர் கலாங்கள் உயிர் வாழ முடியாது, இறைவன் இவற்ரிற்க்கு உண்வாக தாவரங்களையே முதன்முதலாக படைத்து அருளி உள்ளான். அன்று தாவர தோற்றம் முந்தி விளைந்து, உயிர்காற்று எனும் அமிர்த காற்றினை உலக ஆகாயத்தில் விரிவுபடசெய்தது, தாவர உயிர்களே உலகில் முதலில் மழையினை அருளிசெய்தன என்பதும் இயற்கை உண்மை.நாம் காணும் ஒவ்வொரு புல்லும் உலகிற்க்கு உயிர் காற்றையும் மழைதுளியையும் உற்பத்திசெய்துகொண்டே இருக்கின்றன என்பது கண்ணுற்று நோக்கவேண்டியது ஆகும் அல்லவா?..
  • Hseija Ed Rian இவ்வுலகில் உயிர் வாழ”தனியாக” இயலாத மனித விலங்கு புழு பூச்சி இனங்களுக்கு “உயிர் துணை”யாகவே தாவரங்கள் விளங்குகின்றன என்பதும் இயற்கை உண்மை. அப்படி இருக்க ஏனைய உயிர்க்கு முன்னின்று விளங்குவது தாவர உயிர் எனும் அதிசயமே, அதுவே அதிசயத்திலும் அதிசயமானது. அதன் அதிசயம் என்பது கடவுளின் “முதல் பிள்ளை” என்பதாகும்.கடவுள் இவ்வுலகில் படைத்த “முதல் உயிர் பிள்ளை” தாவர படைப்புகளே என்பதும் இயற்கை உண்மை அல்லவா?.
  • Hseija Ed Rian தாவரங்களுக்கு “ஆன்மா” இல்லை என்பது ஒரு மறைபொருல். அவற்றிற்க்கு “ நான்” எனும் போதம் இருப்பதில்லை. உயிர் இருக்கும் ஆனால் ஆன்ம அறிவு இருக்காது....இது பரம ரகசியமான ஒரு விஷயம்...Salai Panchatcharam
  • Hseija Ed Rian சொல்லி சொல்லி நாம் இப்போது சொல்லக்கூடாத “ ஜீவ விருட்சத்தின் விருட்சத்தின்” மறை ரகசியங்களை நோக்கி பிரயானம் பண்ணுகிறோம் என்பது நான் அறிந்தே பேசுகிறேன். சாலை ஆண்டவர் ஜீவனுக்கும் மரங்களுக்கும் உள்ள தொடர்பினை “ஒரு்வாறு” சொல்லி உள்ளார்..அதற்க்குமேல் சொல்லவில்லை, ஏன் சொல்லவில்லை என இங்கு சொல்லதேவை இல்லை. ஆனால் உயிர் இனங்கள் மரனத்துக்கு பின் மரங்களின் வேர் முகாந்திரம் அடுத்த பிறவிக்கு தக்க உடலில் வருகின்றன என “ஒருவாறு” சொல்லியுள்ளார். ஆனால் “ஆதி அவத்தை” என்ன என அவர் சொல்லவும் இல்லை விளக்கவும் இல்லை....இந்த உலகத்துக்கு “உயிர் வந்த வழி” எது என அவர் சொன்னதாக கேட்டதில்லை....கடைசியில் வரக்கூடிய “ஜீவ பிரயாணத்தை” மட்டுமே அவர் சொல்லுகிறார், ஆனால் “ஜீவ வரவு” எப்படி என சொல்லவில்லை....வரவு எப்படி என அற்ந்தால் மட்டுமே”போக்கு” எப்படி என அறிய முடியும்....அல்லாதவர்கள்....”இருப்பு” எனும் நிலையில் மண்ணறையில் “இருப்பார்கள்”.....வரவு அறிந்த பின் போக்கு அறிவாகும், அதுவரைக்கும் இருப்பு தான்.,,அதாவது சமாதி தான்.
  • விஜயகுமார் சு தன இருப்பை உணர்த்திடிம் விதமாக ஆண்டவர்களும் த ன்னிலையின் பொருளிலே என்னாளுமே தாவரமாய் தனிமுதலாய் தங்கிட வெந்தனுக்கு என்று அருளியுள்ளார்கள்
  • Hseija Ed Rian பஞ்ச்சாச்சரம் ஏதொ கொஞ்சம் அறிந்துகொண்டு எல்லாம் அறிந்தவர் போல பேசுகிறார்...பொதுவாக அது அந்த மக்களுக்கு அப்படித்தான்...சொல்லி விளங்க வைப்பது கடினமாக உள்ளது....கடவுள் அருளாலே மட்டுமே ஆதிக்குமுன் அனாதியான “உயிர் வகுப்பு” அரிவாகும் என்பது தெரியாமல் கொஞ்சம் நூல்களை படித்துகொண்டு ஏனையவர்கள் மட்டமானவர்கள், சாலையில் கிடக்கிறவர்கள் தான் ஏதோ அந்தரத்தில் இருந்து குதித்தவர்கள் என நினைக்கிறார்....அதுக்குதான் இதெல்லாம் எழுதுகிறேன்...சாதாரன ஜனங்களுக்கு புரியாத விஷயங்கலை கூட அவர்கள் புரியாமல் இருக்கிறார்கள்....ஒருவித மூடப்போக்கு.
  • Hseija Ed Rian “தாவர சங்கமத்துள்” என வாசகத்தில் சொல்லுவது கொஞ்சம் ரகசியமானது தான்...
  • Saravanan Ramalingam I don't have much spiritual knowledge like you people, but one thing is confusing me here. If man came from this evolution process ("தாவர சங்கமத்துள்") then unlike it is said in all the sacred scripts he has not created by god instead he came from apes. I put my question here as a layman "has humans are created by god or evolved from apes" ?
  • Hseija Ed Rian உங்கள் கருத்துக்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்....உயிர் என்பது பஞ்ச பூத சரக்கா?..அது செத்த பின்பு மண்ணில் கலக்குமா? ...மண்ணில் கலக்கும் பொருளுக்கு எடை இருக்கும் அல்லவா?..தூல பருமன் இருக்குமல்லவா?..பதில் சொல்லுங்கள்.....
  • Hseija Ed Rian உங்கள் கருத்துக்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்....உயிர் என்பது பஞ்ச பூத சரக்கா?..அது செத்த பின்பு மண்ணில் கலக்குமா? ...மண்ணில் கலக்கும் பொருளுக்கு எடை இருக்கும் அல்லவா?..தூல பருமன் இருக்குமல்லவா?..பதில் சொல்லுங்கள்
  • Salai Panchatcharam Mr. Nayar.
    don't use un parliament words. we can also write like anything.when you are following a true path, you have to deliver your message in a polite manner.we are following the meivazhi 100% as directed by meivazhi aandavargal. you have no rights to criticize his words.
    you only told that u did not see his vaakkiam ,aadhimei udhaya poorana vedhaandha and so on. apart from this he took this meivazhi to all casts around 69 different category. most of them were highly qualified and great scholars in saiva siththaantham and all vedhams. they also accepted and experienced his mind blowing words , the way he took them to eternal bliss. we got the great foundation about the true path and following meivazhi. without knowing any details of meivazhi and aandavargal you are criticizing like anything.
    we are ready to clarify whatever doubt u have about meivazhi and true path.make urself free and come to chennai in the 3 rd week of aug 2014. I am ready to clarify all the idiotic question araised by you. you are no way connected to meivazhi. But u posted that u spoke with meivazhi aandavarkal and u r hearing the bell sound in ur ear. அவர்களின் நாதமானது நின்று விளங்குவது நீ சொல்லும் உன் ஊணக்காது அல்ல. better check ur ear with an ENT doctor. என்ன கதை விடுராயா... நாங்கள் நிதர்சனமாக தரிசித்துக்கொண்டிருக்கிறோம்.அவர்கள் காட்டிய மெய்வழியில் நடை போட்டுக்கொண்டிருக்கின்றோம்.
    don't try to show ur superiority in this.don't mislead the peoples. 
    if u don't want to meet me. just keep quit and don't make any post against meivazhi.

    உங்களால என்ன சொல்ல முடியும். மெய்வழி ஆண்டவர்களின் ஒரு வாக்கிற்கு அர்த்தம் சொல்ல முடியுமா ?
    ”ஆட்டி வெந்து சாம்பலாய் போனவித்து 
    அப்புரமும் கால்முளைத்து எழுந்தவாரும்” என்று அருளியுள்ளதற்கு என்ன பொருள் நீ சொல்ல முடியும்.
    மெய்வழி பெரிய கடல். அதை உண்டாக்கியவர்கள் சர்வேஸ்வரன். அதில் நீந்திக் கரைசேர அவர்களின் அருள் இருந்தாலொளிய.... கோகரணம், கஜகரணம் போட்டாலும் காண முடியாது.
    மக்களே உசார்..
    குத்துப்பாடும் கோல்ச்சொல்லி கலைக்க வருவான்
    அவன் குருட்டு இபூலிசென்று ஊதூது சங்கே....
    என்று மெய்வழி ஆண்டவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
    மெய்னிலை அறிந்தவர்கள் மெய்வழிச்சாலயில் உள்ளார்கள்...
    பொன்வெள்ளி செய்கிறவன் பெரியோன் அல்ல
    புகழான அஸ்ட்ட சித்து பெரியோன் அல்ல
    முன்னின்ற வைத்தியனும் பெரியோன் அல்ல
    மூச்சடங்கி எழும்பினவன் பெரியோன் அல்ல
    தன்னை அறிந்தவரே பெரியார் ஆவார்
    தனை அறியான் வகைகெட்ட சண்டி மாடே

    என்று முருகப்பெருமான் அருளியுள்ளார்கள்.
    தன்னை ஆரிந்தவர்கள் சாலையில் உள்ளார்கள்.

    காதுள்ளவர்கள் கேட்கக் கடவது..

    இருசெவியும் உயிர்த்துளையாம் திட்டோறாது என்று இருப்பவர்கள் இருக்கட்டும்.
    அறியோம் , நற்றால்கள்,
    குரு வாழ்க, குருவே துணை.
  • Salai Dayalan Hseija Ed Rian அய்யா எங்கள் மெய்வழி மக்களுக்கு ஒன்றும் தெரியாமலே இருக்கட்டும். நீங்களே எல்லாம் அறிந்தவராக இருங்கள். நன்றிகள்.
    July 25 at 5:29pm · Edited · Like · 1
  • Saalai Maraan Salai Panchatcharam Salai Dayalan. அடி முடி அறியா முழு முதல் பொருளை (முழுவதும் அறியாமல்) நேர்முகத்தில் பகிர்ந்து கொண்டாலே தெளிவு கிடைக்காது. Facebook chatting மூலம் ஒருவருக்கு எப்படி விளக்கம் தர முடியும்? அதனால் அவர் மீது வருத்தம் வேண்டாம். நாம் மூடப்போக்கில்தான் உள்ளோம் என்று ஒத்துக் கொள்வோம்.!!!
  • Saalai Maraan "தெளிவு குரு உரு காணல்..."
  • Salai Dayalan அய்யா எங்கள் மெய்வழியில் கல்வியில் சிறந்து விளங்குபவர்களுக்கும் கல்வியே கல்லதவர்களுக்கும் எங்களுடைய தெய்வத்தின் கிருபையால் முக்தி கிடைக்கிறது. அது ஒன்று மட்டும் எங்களுக்கு போதும். உங்களுக்கு தெரியும் அனைத்து விசயங்களும் எங்களுக்கு தெரியத் தேவை இல்லை அய்யா.
  • Salai Dayalan சாலை மாறான் அண்ணா மன்னிக்கவும். அவர் கேட்பதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதனால் தான் பதில் கூறுகிறோம்.மன்னிக்கவும்.
  • Saalai Maraan புரிகிறது. ஆனால் நாம் தங்கம் போன்ற குணமுடைய மக்களாக இருக்க வேண்டும் அல்லவா?
  • Saalai Maraan "பணியுமாம் என்றும் பெருமை அணியுமாம் 
    சிறுமை தன்னை வியந்து"
  • Salai Panchatcharam சரியாகச் சொன்னீர்கள் மாறான் அண்ணா.

    அந்த ஒரு மொழியாம் குருமொழிமெய்ப்பாழறிந்தால் ஒரு கோடி நூற்கும் பொருள் ஆகும்... அதை அறியாதவர்கள் இப்படிதான் தான் படித்த இலக்கணம் கொண்டு அர்த்தம் பண்ணுவார்கள்.
  • Salai Panchatcharam னன்றி தயாளன் அண்ணா.
    நம் ஆண்டவர்கள் அவர்களை அறிந்தவர்களுக்கும் அடுத்து அறிய உள்ளவர்களுக்கும் அந்த முக்தி, மோட்சம் என்ற நிலையை வாறி வழங்கும் கருணாமூர்த்தி... அவர்களின் நிலையை அறியாமல் குறை கூறுபவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்...னாம் அவர்களின் பாதம் நோக்கி இறைஞ்சி கடைத்தேறுவோமாக...
    குரு வாழ்க, குருவே துணை
  • Salai Panchatcharam தன் பெயரைக் கூட நேராக எழுதாத ajiesh nair.... சொல்லும் ஆன்மீக கருத்துக்கள் என்ன நேராகவா இருக்கும்...
  • Saalai Maraan Salai Panchatcharam. அது அவரது சொந்த விருப்பம். தனிப்பட்ட துவேஷம் வேண்டாம். அவரது கேள்விகள் அனைத்திற்கும் பதில் நம் திருமறையில் உள்ளது. அந்த ஜீவப்பரிசு அவருக்கும் கிடைக்கலாம். அவருக்கு னமஸ்காரம் கூறி முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறேன். னமஸ்காரம்.
  • Salai Panchatcharam னன்றி அண்ணா..னமஸ்காரம்
  • Hseija Ed Rian என்ன அறிவு, என்னா அடக்கம் ,சட்டியிலே உள்லது அகப்பையிலே வரும் என்பார்கள், அது போலத்தான் இருக்கிறது....இப்படி உள்ளெ இருப்பது வெளியே வரவேண்டுமென்றே எதிர்பார்த்தேன் நல்லது...நன்றாக இருக்கிறது....எத்தனை உபதேசம் ஆனாலும் உள்ளே இருப்பது அப்படியே தான் இருக்கிறது....இப்படியான மனத்தையும் குணத்தையும் கோவத்தையும் கொண்ட உயிரா அடக்கத்திற்க்கு ஏதுவானது என கேட்க்க தோன்றுகிறது...கிறிஸ்து சொல்லுவார்,” நீ உன்னுடைய குணங்களினாலேயே நீ யாருடைய சீடன் என்பதை வெளிக்காட்டுவாய்”...
  • Saalai Maraan கிறிஸ்து சொல்லுவார்,” நீ உன்னுடைய குணங்களினாலேயே நீ யாருடைய சீடன் என்பதை வெளிக்காட்டுவாய்”...
  • Hseija Ed Rian மேலே பாருங்கள், நான் என்னுடைய பதிவுகளில் எந்தவொரு துஷ்ட்ட நினைவுகளினாலும் பாதிக்கப்படாமல் உண்மையானது வெளிக்கொணர ஏதுவாகவே கேள்விகளை கேட்க்கிறேன்.ஆனால் நான் கேட்ட விஷயத்தின் பதிலை சொல்வதற்க்கு தயங்கும் விதத்திலேயே கதை ஓடுகிறது. ஆண்டவர் சொல்லி இருக்கிறார் என சொல்லும் நீங்கள் அதை ஏன் மேற்கோள் காட்ட தயங்கு கிறீர்கள்?...உயிரின் தன்மையை விளக்க கூறினால் ஏதோ எங்கோ செல்கிறீர்கள்...இதிலிருந்து உங்கல் நிலை தெரிகிறது...முன்பு நான் சொன்னதுவே சரி என நிரூபித்து விட்டீர்கள், முட்டள்தனமாகவே பேசுகிறீர்கள் ,கோவமோ பொத்துகொண்டு வருகிறது....அதிலிருந்து நீங்கள் யாருடைய சீடன் என நான் யூகித்து கொண்டேன்...ஆனால் என்னை ஏசினாலோ...என்னுடைய குருவை ஏசினாலோ..என்னுடைய குலத்தையோ குடும்பத்தையோ ஏசினாலோ எனக்கு ஒன்றும் ஆகாது...அதில் மனம் சங்கடப்படுபவனும் அல்ல நான்...அப்படியே சிரித்துவுடுவேன்...ஏனெனில் இவற்றினால் ஆவதொன்றில்லை...அறியவேண்டியது அறியும் போதே அறிவு உண்டாகும் ,அதுவரை புரிதல் என்பது வெகுகடினம் என்பதை அறிவேன்....ஆண்டவர்கள் சொல்லி இருக்கிறார் என சொல்லும் நீங்கள் ஏன் “உயிரானது இப்படி மண்னில் கலக்குமா “ என நிதானிப்பதில்லை எனவே நான் கேட்க்கிறேன்....பதில் சொல்ல தெரியவில்லை எனில் தெரியவில்லை என சொல்லுங்கள்.....கிறிஸ்து சொன்னதுபோல், “உள்ளதை உள்லதென்றும் இல்லாததை இல்லாததென்றும் சொல்லுங்கள், அதற்க்கு மேல் உள்ளது தீமையினால் வருவதாயிருக்கும்”.....ஆகையினால் வேறு விஷயங்களை கலாய்ப்பதை விட்டு” உயிர் மண்னில் கலக்குமா ?”என்பதற்க்கு சாலை யுகபுருஷர் பஞ்சாச்சரம் மறுபடி சொல்வாராக.
  • Salai Panchatcharam உயிரானது அரூபப் பொருள்.... அது நீங்கள் சொல்வதுபோல் விந்துவில் இருக்காது... தந்தையின் என்னமாம் வன்னியாலே எடுத்திடும் தேகம் ...என்றும் விந்துவுடன் நாதமானது கலந்து கருக்க்குழியில் செல்வதால் தான் எத்தனையோ விந்துக்கள் சென்றாலும் ஒன்று அல்லது இரண்டு உயிர்ப்பெற்று கருவாகின்றது... அந்தக் கருவை அந்த வாலைத்தாய் உடன் இருந்து வளர்த்து வருகின்றாள் என்பதில் ஏதாவது ஐயம் இல்லை.பஞ்சபூதக் கலப்பில்தான் எல்லாம் இயங்குகின்றது... அக்கினியானது ஜலத்தை வைத்திருப்பது போன்றும், ஆகாயமாகிய வெரு வெளியானது நெருப்பை வைத்திருப்பது போன்றும் எசன்சு வடிவத்தில் வைக்கபட்டுள்ளது...எங்கள் ஆண்டவர்கள் சொல்லியிருப்பது எங்களுக்கு வேதம்...அதை எங்கள் அறிவு சம்மதிக்க நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம்... நீங்கள் ஏற்றுக் கொள்ள் வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை....
  • Salai Panchatcharam னீங்கள் அறிவாளியாக இருந்தால் உங்கள் இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் போஸ்ட் போடுங்கள். நம்பினவர்கள் னம்பட்டும்.. எங்களை வீண் வம்பிற்கு இழுக்க வேண்டாம்
  • Hseija Ed Rian உண்மை...உண்மை...உண்மை...அப்போ எப்படி செத்து 40 நாள் கழிந்து எண்ணமாய் இருக்கிற அந்த உயிரானது மண்ணில் கலக்கும்?..தந்தையின் எண்ணமாய் இருக்கின்ற உயிரானது எப்படி மண்ணில் கலக்கும் என்பதுவே என்னுடைய கேள்வியும்.??/...உங்கள் ஆண்டவர் சொன்னதின் விளக்கத்தை சீடர்களாகி நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்....தந்தையின் எண்னமாய் வருகிற உயிரா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் கொண்டது??/ தந்தையின் எண்னமா உயிர் ,,இப்படியா உங்கள் ஆண்டவர் சொல்லிகொடுத்தார்?..யாரிடம் கதைக்கிறீர்கள் பஞ்சாச்சரம்?..தூலம் உருவல்லாதிருக்கு உயிரானது தூலமாயிருக்கும் மண்ணில் கலப்பது எங்ஙனம் என்பதை உங்கள் பண்டிதர்களிடம் கேட்டு விளக்கம் சொல்லுங்கள்....தெரியலை என்றால் வாருங்கள் கோடிசூரிய பிரகாசம் பொருந்துவது எப்படி என சொல்லிதருகிறேன்.....Salai Panchatcharam
  • Hseija Ed Rian பஞ்சாச்சரத்திற்க்கு தெரிஞ்சது இவ்வளவுதான்...இதை வைத்துகொண்டு என்னா கலாய்க்கிறீர்கள்?..தெரியாததை தெரிந்தது போல காட்டி மக்களை ஏமாற்றுகிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறதல்லவா?..உயிர் என்றால் என்ன என்று கூட சொல்லதெரியறதில்லை...பெரிய படிப்பு படிச்சிருக்கோம் நாங்க..எங்க ஆண்டவர் அப்படியான படிப்பு சொல்லிக்கொடுத்திருக்கிறார் என்றெல்லாம் கதை விட்டீர்களே...இப்போ என்னாச்சு?...உயிர் என்றால் தந்தையின் எண்னமே உயிர் என்கிறீர்கள்...உங்களை நினைக்கும் போது பரிதாபமாகத்தான் இருக்கிறது....இது படிக்கவேண்டியவர்களிடம் படிக்காததின் குறைவே என்பது தெளிவாக படுகிறது...கொஞ்சம் படித்தவுடன் எல்லாம் படித்துவிட்ட தலைக்கனம் தான் இப்படியெல்லாம் உங்கலை பேசவித்தது...இப்போது திரு திரு என விழிக்கிறீர்கள்...மொத்த சாலையின் பெயரையும் கெடுத்துவிட்டிர்கலல்லவா?.....பதில் சொல்லு முன்னே கொஞ்சம் நினைக்கவேண்டாமா?..எண்னமானது எப்படி செத்து 40 நாள் கழித்து உடலில் இருந்து வெளியேறி மண்ணில் கலக்கும் என்பதனை?....இதுகூடாவா சாலையில் சொல்லி தரவில்லை?//வெட்கமாக இருக்கிறது...சாலை பஞ்சாச்சரமாம்...Salai Panchatcharam
  • Hseija Ed Rian அரூப பொருளான உயிர் எப்படி உருவ பொருளான மண்ணில் கலக்கும்...எப்படி மரத்தில் செல்லும் ..எப்படி உனவில் இருக்கும்...எப்படி சுக்கிலத்தில் சேரும்.....?..இவை எல்லாம் உருவமாச்சே..என்ன விளக்கம் சொல்லபோகிறீர்கள் பஞ்சாச்சரம்/?
  • Hseija Ed Rian பார்மாகோளஜியும் பார்மாகோக்னசியும் டாக்ஸிகோணமியும் படிச்சதில்லையா?ப்ளாண்ட் அனடொமி தெரியாதா?..ஆர்காணிக் இனார்காணிக் கெமிஸ்டிரி படிக்கலையா?..எங்காவது எந்த தாவரத்திலும் எந்த ஆல்கலைடிலும் ’மனித உயிர்” இருக்கிறதா?...டானினில் இருக்கிறதா...பாருங்கள் மைக்ரோஸ்கோப்பிக் அனாலிஸிஸ் பண்னி பாருங்க எங்க மனித உயிர் அணு தாவரத்தின் மூலமாக உட்சென்று தங்கி இருக்கிறது?...எதுக்கு இல்லாத்த கதையை ஆன்மீகம் எனும் போர்வையில் சொல்லி ஏமாற்றுகிறீர்கள்?...Salai Panchatcharam
  • Salai Panchatcharam னாயர்.... நீங்கள் எல்லை மீறிப் போகின்றீர்கள்.
    நான் சுருக்கமாக போட்டதை பெரிய அறிவாளி போல் குற்றம் கண்டுபிடித்து விட்டீர்கள்... சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள்... அவசரப் புத்தி.
    தந்தையின் நினைவாகிய அக்கினியானது தூண்டப்பெற்று அதன்பிறகு விந்துவானது சுரோனிததுடன் கலக்கும் போது கருவானது உருவாகின்றது... இது ஆண்டவர்கள் வாக்கில் வந்ததை படிதிருப்பீர்கள் என்று சுருக்கமாகப் போட்டால் அதை வைத்து பாலிடிக்ஸ் பண்ண பார்க்கிறாயே...
    நான் எல்லாம் தெரிந்தவன் போல் நடிக்கவும் இல்லை.. யாரையும் ஏமாற்ற வில்லை..உம்முடய புறிதல் எங்களுடன் ஒத்துப்போகவில்லை.... உமக்கு ஈகோ....உம்மிடம் எந்த தொடர்பும் வேண்டாம் என்று விலகினாளும் ஏன் வம்பிளுக்கின்றாய்...னீ என்னை எந்த அளவில் அசிங்கப்படுத்தினாலும் நான் கவலைப்படப்போறதில்லை...எங்கள் குலத்தயும் ஆண்டவர்களையும் மட்டமாக சித்தரித்தால் அதன் பிரதிபலனை
    ஆண்டவர்கள் அளப்பார்கள்...எனக்கு எதுவும் தெரியாமலே இருந்திட்டுப் போகுது... எல்லாம் தெரிந்த நீர் உங்கள் இஷ்ட்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் போடுங்கள்...னம்புபவர்கள் நம்பட்டும்.
    என்னுடய அறிவை சோதித்து அதற்கு சான்றளித்தமைக்கு நன்றி...
  • Salai Panchatcharam கோடிசூரியப் பிரகாசம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும்... நான் உங்களிடம் எதுவும் தெறிந்துகொள்ள விரும்பவில்லை... 
    முதலிலிருந்து நீர் போட்ட போஸ்டிங்கை திரும்ப படித்துப் பாருங்கள்... நாங்கள் போட்ட பதிலை திரித்து எழுதிவிட்டால் நீர் அறிவாளியா.... மெய்வழி ஆண்டவர்கள் உன் காதில் வந்து மணி நாதமாக பேசுகிறார் என்று ஒரு பொய்யை அவிழ்த்து விட்டீர்கள்... அப்படி என்றால் அவர்களிடமே இதன் விளக்கத்தை கேட்கலாமே...ஏன் என்னை மட்டப்படுத்தி நீர் அறிவாளிபோல் காட்டிக் கொள்கிறீர்... னான் தான்
    நேரடியாகப் பேசி இதன் விபரங்களை விவாதிக்கலாம் என்று சொல்லி விட்டேனே... உம்மிடம் உள்ள ஆதாரத்தை எடுத்து வாருங்கள்.. எம்மிடம் உள்ள வேத ஆதாரங்களை எடுத்து விவாதிப்போம்.. அதன் மூலம் ஒரு விடிவு கிடைக்கும்...அதை விட்டுவிட்டு அரசியல் போல் அனாகரீகமாக என்னைத் தாக்குவதில் குறியாக உள்ளீர்...இது போதும் இத்தோடு முற்றுப்புள்ளி வைய்யும்....மீண்டும் என் குலத்தயோ ஆண்டவர்களையோ
    தவறாக சித்தரித்தால் அதற்காண பலனை ஆண்டவர்கள் அளப்பார்கள்.
  • Hseija Ed Rian அட பாவமே...எங்கெல்லாம் போகிறது உங்கல் புத்தி ..ரெம்ப தான் அறிவாளி..ஒத்துகொள்கிறேன்...ஆனாலும் உயிர் எப்படி மண்ணில் கலக்கும் என்பதை சொல்லவே இல்லையே அறிவு சக்கரவர்த்தியே....
  • Hseija Ed Rian அளப்பதற்க்கு மரைக்கால் இருக்கின்றதா என்ன?..கொண்டுவந்து அலந்து பாருங்கல், அப்போது தெரியும் எத்தனை அண்டங்கள் அளப்பீர்கள் என்பது?..”தகர வெளி” ரெம்ப பெரியது அளப்பற்றது....தகர மெய்ஞான தனிப்பெரும் வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெரும் ஜோதி......நூல்களில் கிடந்து நோண்டவேண்டாம் ..உங்கள் கையில் இருக்கும் எந்த நூல்களிலும் “தகர மெய்ஞானம்” இல்லவேஇல்லை...தகரவெளி சொல்லப்படவும் இல்லை...தகரமெய்பொருள் தெரிவிக்கவும் இல்லை... உயிர் நிலையோ தெரியலே அதுக்கு மேல எங்க தகர வெளி ஏரப்போகுது?
  • Shiva Ram மாற்றி மாற்றி சாயம் பேசுவது மனிதற்கு இயல்பாய் போச்சி
  • Salai Panchatcharam உனக்குத் தெரிந்ததை நீயே வைத்துக் கொள்... 
    உன் தகரம் , இரும்பு, பித்தளை எல்லாம் யாருக்கிட்டேயாவது போய் வியாபாரம் பண்ணு....னான் உன்கிட்டே விவாதம் பண்ண விரும்பலைனா விட்டு விட வேண்டியது தானே.. நான் என்னமோ உன்கிட்டே சிக்கிகிட்ட மாதிரி நீ என்னமோ பெரிய வெங்கா
    ...See More
  • Hseija Ed Rian அப்படியா,...மண், நீர், அக்கினி காற்று ,ஆகாயம் இப்படியான பஞ்சபூத தத்துவம் தான் உயிரா?...அப்படித்தானே....அப்படிப்பட்ட உயிரை பாக்கிறதுக்கு எதுக்கு பிரம்மவித்தை?.. ஆளை ஏமாத்துறதுக்கா?... அதுதானே உங்களுக்கு தெரிஞ்சா சொல்லவேண்டியது தானே...40 நாள் கழிந்து மண...See More
  • Hseija Ed Rian இதுதானே பரிசுத்தமான உயிர்?...பஞ்ச பூத உயிர், பஞ்சாச்சர உயிர்?...ஹ...ஹ...ஹ.. இதுதான் சாலைபடிப்பா?
  • கார்த்தி கேயன் oruporulam thiruporulai arindhal oongum oru koodi noolgalukkum porul vilangumam..Arindhavarku mattumai adhu thiruporul..Edhuvey ella gnanigalum,siddhargalum unardhu arindhu sonnadhu..Anubavamey aasaan endru summa sollavillai..Anubavathai kondu muzluvadum vilaka yarum illai..

    http://m.youtube.com/watch?v=hcEgerTznDw
    this video was taken in indonesia ,the toraja island it was a death ceremony. so... See More

1 comment:

Srinivasan Udupa K.N said...

ஐயா / அம்மையாரே

தாங்கள் அனைவரும் கோரும் உயர் நிலை - அதாவது அடுத்த பிறவியற்ற நிலையினை கொடுப்பதற்காகவே மேலான ஆத்மாக்களான ஆறுமுகர், அகத்தியர் என்போர் தீட்சை கொடுக்க இன்றும் இக்கலிகாலத்திலும் புவிக்கு விஜயம் செய்கின்றனர்.

உமது ஆத்ம அணுவினை ஈசன் மற்றும் ஆதிசக்தியான தாய் தந்தையோரிடம் சேர்த்து பிறகு அதனை விடிவுத்து உயர் நிலை அடைய - விண்மீனாய் மாறிவிடவேண்டிய மார்க்கத்தை இன்றும் இவர்கள் அளித்து கொண்டேயிருக்கின்றனர்.

பாரத்வாஜர், வால்மீகி, துர்வாசர் மற்றும் அநேக உயர் ஆத்மாக்களும் - மானிடர்கள் தம்மை உயர்நிலைக்கு எடுத்துச்செல்லமாட்டார்களா எனும் ஏக்கம் கொண்டு காத்துள்ளனர்.

இதற்கு தேவையாகும் இரு நிலைகள் :

புலால் உண்ணாதவர்களே மிக நன்று என்று உரைக்கின்றார்கள் - இது ஒரு நிர்பந்தமல்ல. ஆயினும் அவர்களது விருப்பம் இதுதான். அதற்கு பல காரணங்களும் நாம் அறியா விளைவுகளும் உண்டு - ஆகையால் அதனை பின்பற்றுபோர் உய்வடைவர் என்று
கொள்ளவேண்டும். ஏனெனில் மானிடர் ஒருவருக்கு மாபெரும் சக்தியொன்றினை அவர்கள் அளித்தால் அதனை நல்முறையில் பிரயோகம் புரிவது அவசியம் - இல்லையே அதனால் ஏற்பட்டக்கூடிய விளைவுகள சுத்த ஆத்மாகவாக இருந்தபோதும் அனுபவிக்கத்தான் வேண்டும். இதற்காகவே இவ்வுணவு பழக்கம் நன்று என உரைக்கின்றனர்.

கொடுக்கபட்ட தேதியில் ஆலயத்துக்கு விஜயம் செய்து 3 அல்லது 4 முறையாவது தீட்சை பெறவேண்டும். பிறகு உயர் ஆத்மாக்களின் தேர்வுக்கிணங்க ஆத்ம விடியல் அளிப்பர்.

இதனை தாங்களே கண்கூடாக உணர்வீர்கள்.

இல்லற வாழ்க்கைக்கு ஒரு தடையும் இல்லை - அவர்கள் கூறுவது ஏதெனில்,

இல்லறம் அல்லது உலகம் சார்ந்த வேரு செயல்களை புரியும் சமயத்தில் மாத்திரம் அதனை பற்றி சிந்தியுங்கள்.

மற்ற காலமெல்லாம் ஈசனை பற்றியே சிந்தியுங்கள் என்பதுதான்.

விருப்பம்கொள்வோர் தொடர்பு கொள்க.

ஸ்ரீனிவாசன் உடுப்பா. கே.என்

communicationtype@yahoo.com