Pages

Saturday, July 11, 2015

மரணம் இயற்கையா செயற்கையா??=வள்ளலார் பார்வை-1 - Ajiesh

வள்ளலார் மரணத்தை பற்றி தன் ஞான விளக்கங்களில் எவ்வாறு விளக்குகின்றார் என்பதை கண்ணுறும் போது , அது ஆச்சரியமடைய செய்கின்றது. ஆம், என்னதான் அவர் பார்வை என்பதை சற்று சிந்திப்போம், அது நமக்கு நலம் பயக்குமல்லவா?
மரணம் என்பது “ அனாதி இயற்கை இல்லை, ஆதி செயற்கையாம்” இது வள்ளலார் வாய்மொழி, அவர் உபதேச குறிப்பு. இங்கு மரணம் எப்படி “ஆதியில் செயற்கையானது?’”...அதை பற்றி விளக்கம் வரவேண்டுமெனில் “ஆதி இயற்கை “ என்பது என்னவென நாம் முற்றாக அறிந்திராவிடில் அறிவுதயமாகா, அல்லவா?. ஆகையினால் “ஆதி எது- அனாதி எது?” என்பதை திட்டமாக அறிந்து நாம் நம்மை உய்ய்த்தேற்றவேண்டுமல்லவா?,,,அனாதியில் இல்லாதிருந்த மரணம் எங்கிருந்து ஆதியில் செயற்கையாக ஜீவகுலங்களை பீடித்துகொண்டது என்பதின் வம்ச வரலாறு தான் என்ன?..அன்பர்கள் சிந்திக்ககடவீர்கள்.மரணம் வந்த வழி என்ன?..வந்த வரலாறு என்ன? வந்தோன்றிய காரணம் தான் என்ன? மனுபயிர்குலங்கள் மாளாவழிதான் என்ன?

No comments: